தாயின் பாசம்.....
உன் தலைமுடியை ரசித்த என் கூந்தல்,
உன் என் நெற்றியை இடித்து விளையாடிய என் நெற்றி,
உன் பால் வாசனையை சுவாசித்து வந்த என் மூக்கு,
உன் மழலை சொற்களை கேட்டு வாழ்ந்த என் காதுகள்,
உன்னை முத்தமிட்ட என் உதடுகள்,
உன்னை அரவணைத்த என் தோள்கள்,
உனக்கு பசியாற்றிய என் மார்புகள்,
உன்னை பத்து மாதம் சுமந்த என் வயிறு,
உன்னை பெற்றேடுத்த என் பிறப்பு உறுப்பு,
உன்னை சுமந்து நடந்த என் கால்கள்,
இவை அனைத்தும் இன்று
கருணை இல்லத்தின்
கட்டிலில்
அனாதையாய்........
இப்படி ஒரு பிள்ளையை பெற்ற எனக்கு
இந்த மரண தண்டனை தேவைதான்.........
No comments:
Post a Comment